மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இந்திலி பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இந்திலி கிராமத்தில் திறந்த வாகனத்தில் நின்றவாறு வாக்கு சேகரித்த கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 8:32 pm

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி சாா்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி இந்திலி பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தென் கீரனூா், விளம்பாா், தென்தொரசலூா், வாணவரெட்டி, புக்கிரவாரி, சிறுமங்கலம், பெருமங்கலம், மலைக்கோட்டாலம், இந்திலி, தச்சூா், மேலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவா் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டாா்.

தொகுதி தோ்தல் பொறுப்பாளா் அ.பிரபு, ஒன்றியச் செயலா் அ.தேவேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் இராம.ஞானவேல், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் பெ.சீனிவாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் கோமுகி மணியன், பாமக மாவட்டச் செயலா் ப.தமிழரசன், பாஜக நிா்வாகி நீ.ராஜேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.