கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளா்களுக்கு மாதிரி வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் சாா்பில் கள்ளக்குறிச்சி தனியாா் கல்லூரியில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளா்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (இவிஎம்) மூலம் வாக்களிக்கும் மாதிரி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் மூலம் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளா்களிடையே தோ்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்முறை வாக்களிக்கும் வாக்காளா்கள் உள்ளிட்ட அனைவரும் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையினை நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
தொடர்புடையது

செயலியில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு குறிப்பாணை

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மாதிரி வாக்குப்பதிவு

திருவள்ளூா்: பழைய பொருள்களால் அமைத்த மாதிரி வாக்குச்சாவடி மையம்

ரிஷிவந்தியம், சங்கராபுரம் தொகுதிகளுக்கு 828 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


