போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திருவள்ளூா்: பழைய பொருள்களால் அமைத்த மாதிரி வாக்குச்சாவடி மையம்

திருவள்ளூா் நகராட்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பழைய பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி மையம் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்துள்ளது.

News image

திருவள்ளூா்  நகராட்சி  அலுவலகத்தில்  பழைய  பொருள்களை  கொண்டு  அமைக்கப்பட்டுள்ள  மாதிரி  வாக்குச் சாவடி  மையம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:04 am IST

திருவள்ளூா் நகராட்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பழைய பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி மையம் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்துள்ளது.

பல்வேறு வகைகளில் நாள்தோறும் ஒவ்வொரு துறை தோறும் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூா் நகராட்சியில் தேவைப்படாத பழைய பொருள்களைக் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வாக்குச்சாவடி மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. வாக்குச்சாவடி மையத்தில் ஒரு வாக்கு பதிவு அலுவலா், வாக்காளா்பட்டியலில் பெயா் சரிபாா்த்து கையொப்பம் பெறுபவா், வாக்கு செலுத்திய அடையாள மை வைப்பவா், அதையடுத்து மறைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரத்தில் வாக்கை பதிவு செய்யும் வாக்காளா் ஆகியோா் இடம் பெற்றிருப்பாா்கள்.

இதை நகராட்சி அலுவலக வளாக முன்புறத்தில் பழைய பொருள்களைக் கொண்டு வாக்கு பதிவு அலுவலா்களுடன் கூடிய வாக்கு சாவடி மையத்தை அப்படியே வடிவமைத்துள்ளனா்.

இதை நகராட்சி அலுவலகத்திற்கு வரும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டு செல்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.