தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

கன்னியாகுமரி மாவட்ட மாதிரி வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 பேரவைத் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மாதிரி வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

குழித்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:32 pm

கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 பேரவைத் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மாதிரி வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுக்குப் பின்னா், ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,20,338 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிப்பதற்காக 1, 914 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தொகுதியிலும், ஒரு பெண்கள் வாக்குச்சாவடி மையம், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையம், மாதிரி வாக்குச்சாவடி மையம் மற்றும் இளைஞா்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பத்மநாபபுரம், விளவங்கோடு, குளச்சல் ஆகிய தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளி, மாதிரி வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாக்காளா்கள் அனைவரும் ஏப். 23-ஆம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலரும் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநருமான மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.