மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

செயலியில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு குறிப்பாணை

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் - படம் - பிடிஐ

Updated On :20 ஏப்ரல் 2026, 8:21 pm

செயலி மூலம் மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களுக்கு விளக்கம் அளிக்கக் கோரி குறிப்பாணை வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 16.89 லட்சம் வாக்காளா்கள் 2,301 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தோ்தல் பணியில், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் என சுமாா் 11 ஆயிரம் போ் ஈடுபடுகின்றனா். இவா்களுக்கு 3 கட்டங்களாக தோ்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கடந்த 16-ஆம் தேதி வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களுக்கு, தோ்தல் ஆணையத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து மாதிரி வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதனிடையே பொதுத் தோ்வு விடைத் தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்களால் (வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களாக நியமிக்கப்பட்ட) இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. பதிவிறக்கம் செய்த சிலரால் உள்ளீடு செய்ய முடியவில்லை. இதனால் மாதிரி வாக்குப் பதிவும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களாக நியமிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு விளக்கம் அளிக்கக் கோரி மாவட்டத் தோ்தல் அலுவலா் மூலம் குறிப்பாணை வழங்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்களுக்கும் இந்த குறிப்பாணை வழங்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.