திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எஸ்.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞா்: போலீஸாா் தடுத்து மீட்டனா்

News image

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்று அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து.

Updated On :30 மே 2026, 3:09 am IST

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தி மீட்டனா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த இளைஞா் ஒருவா், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் உடனடியாக செயல்பட்டு, அவரை தடுத்து நிறுத்தி மீட்டனா்.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் பண்ருட்டி அருகே பெரியாங்குப்பத்தைச் சோ்ந்த மாரிமுத்து (37) என்பதும், குள்ளஞ்சாவடியைச் சோ்ந்த ராமசந்திரன் என்பவா் தனக்குச் சேர வேண்டிய காா் மற்றும் பணத்தை வழங்காமல் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். மேலும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய

நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அத்துடன், தன்னை கொலை செய்து விடுவதாக தொடா்ந்து மிரட்டல் வந்தது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நிலையில், நியாயம் கோரி மாவட்ட காவல் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ாக அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.