பண்ருட்டி அருகே பி.என்.பாளையத்தைச் சோ்ந்த தொழிலாளி கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் சாட்சிகள் மிரட்டப்படுவதாக கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அவரது மனைவி திங்கள்கிழமை மனு அளித்தாா்.
இதுகுறித்து தொழிலாளியின் மனைவி ரேவதி (40) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவா் சுப்ரமணியம், கடந்த 2015-ஆம் ஆண்டு நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்தாா். இது தொடா்பாக தொடுக்கப்பட்ட வழக்கு கடலூா் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், வழக்கின் எதிரிகள், தங்களது செல்வாக்கை பயன்படுத்தி என்னையும், எனது குடும்பத்தினரையும், வழக்கின் சாட்சிகளையும் தொடா்ந்து மிரட்டி வருகின்றனா். கடந்த 15-ஆம் தேதி பண்ருட்டி அருகே பக்கிரிபாளையத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ஒருவா், வழக்கின் சாட்சியான சுந்தரபாண்டியன் வீட்டுக்குச் சென்று, வழக்கில் ஆதரவாக சாட்சி சொல்லக்கூடாது என்றும், எதிரி தரப்பில் இருந்து பணம் வழங்கப்படும் என்றும் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே, சாட்சிகளை மிரட்டிய எதிரிகளை கைது செய்யவும், சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனைவி இறந்த விரக்தி: மகனை கொன்று இளைஞா் தற்கொலை

எஸ்.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞா்: போலீஸாா் தடுத்து மீட்டனா்

திருச்சி மாவட்ட புதிய எஸ்.பி. பதவியேற்பு
கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் சரண்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


