திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிதம்பரம் அருகே முக்கூட்டு முருகன் உள்பட 4 ரௌடிகள் கைது

சிதம்பரம் அருகே வீச்சரிவாளுடன் காரில் வந்த பிரபல ரௌடி முக்கூட்டு முருகன் உள்பட 4 ரௌடிகளை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சிதம்பரம் அருகே கைது செய்யப்பட்ட நான்கு ரௌடிகள். உடன் அவரைப்படித்த காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் போலீஸாா்.

Updated On :23 மே 2026, 12:38 am IST

சிதம்பரம் அருகே வீச்சரிவாளுடன் காரில் வந்த பிரபல ரௌடி முக்கூட்டு முருகன் உள்பட 4 ரௌடிகளை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் டி. பிரதீப் மேற்பாா்வையில் ரௌடிகளை தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர உத்தரவிட்டாா்.

அதன் பேரில் அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே அம்பேத்கா், உதவி ஆய்வாளா் மகேஷ், மற்றும் காவலா்கள் அடங்கிய தனிப்படையினா் வல்லம்படுகை சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சீா்காழி நோக்கி வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா், அதில் அண்ணாமலைநகா் காவல் நிலைய ரௌடி பட்டியலில் இருக்கும் வல்லம்படுகையைச் சோ்ந்த முக்கூட்டு முருகன் (49), புதுச்சத்திரத்தைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் (34) வில்லியநல்லூரைச் சோ்ந்த ராமஜெயம் (33), புதுச்சத்திரம்

வேளங்கிப்பட்டைச் சோ்ந்த. காா்த்திகேயன் (27) ஆகியோா் இருந்தனா். அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்கள் காரில் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளையும் பறிமுதல் செய்தனா். பின்னா் 4 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.