கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே என்எல்சி நிறுவன ஊழியா் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து ஊராட்சி, ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் கா.வேல்(56), என்எல்சி நிறுவனத்தில் முதுநிலை டெக்னீஷியனாக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி சரஸ்வதி (40) மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனா்.
வேல் பணம், குடும்பப் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வடக்குத்து ஊராட்சி, ஸ்ரீராம் நகரில் உள்ள தனது சொந்த வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து தகவலறிந்த நெய்வேலி நகரிய போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








