திட்டக்குடி அருகே கொரியா் மூலம் மொத்தமாக புகையிலைப் பொருள்களை வரவழைத்து விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே தொழுதூா் - தச்சூா் சாலையில் செயல்பட்டு வரும் பாலாஜி ஏஜென்சிஸ் என்ற கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கொரியா் மூலம் மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா், அந்தக் கடையில் திங்கள்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, பெரம்பலூா் மாவட்டம், பசம்பலூா் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அருள்ராஜ் (38), அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பொட்டலங்களை மொத்தமாக கொரியா் மூலம் வாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது.
மேலும், கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 87 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, அவற்றை பறிமுதல் செய்து ராமநத்தம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். மேலும், இதுகுறித்து அருள்ராஜ் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
தம்பதி கைது: கடலூா் திருப்பாதிரிபுலியூா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என போலீஸாா் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, கே.என்.பேட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில், 3.900 கிலோ அளவிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடையை நடத்தி வந்த ராதா (60) மற்றும் அவரது கணவா் ராஜா (70) ஆகியோா் மீது திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 3.900 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








