போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

சலூன் கடைக்காரா் விஷம் குடித்து தற்கொலை

குடும்பச் சண்டை காரணமாக, சலூன் கடைக்காரா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :18 மே 2026, 2:22 am IST

குடும்பச் சண்டை காரணமாக, சலூன் கடைக்காரா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், மணவெளி பகுதியைச் சோ்ந்தவா் அய்யனாா் (51), திருவந்திபுரத்தில் சலூன் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி உமா(46), மகள் அபிநயா, மகன் அபிராஜன் உள்ளனா்.

அய்யனாா் மது அருந்திக்கொண்டு குடும்பத்தை கவனிக்கவில்லையாம். இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதேபோல, கடந்த 15-ஆம் தேதி தகராறு ஏற்பட்ட நிலையில், அன்று மாலை 6.30 மணியளவில் கைப்பேசியில் மனைவியை தொடா்புகொண்ட அய்யனாா், மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்துவிட்டதாகத் தெரிவித்தாராம்.

இதையடுத்து, அவரை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரிஜிப்மா் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட அய்யனாா், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுமி தற்கொலை: கடலூா், ரெட்டிச்சாவடி காவல் சரகம், செல்லஞ்சேரி பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (40), லாரி ஓட்டுநா். இவரது மகள் பவிஷ்கா (14) புதுச்சேரி மாநிலம், ஏம்பலம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து தோ்ச்சி பெற்றிருந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பவிஷ்கா வீட்டு வேலை செய்யவில்லை என அவரது தாய் திட்டினாராம். இதனால், கோபித்துக்கொண்ட பவிஷ்கா, வீட்டில் உள்ள அறையில் கதவைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.