திங்கள்நகா் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திங்கள்நகா் அருகே பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மரியலீமா மகள் மேரி டயானா (37). இவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூா்த்தி என்பவருடன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு 7 வயதில் மகள் உள்ளாா்.
தற்போது பள்ளி விடுமுறையில் பெற்றோா் வீட்டிற்கு மேரி டயானா வந்திருந்தாா். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவா் விஷம் குடித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு கருங்கல் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
பின்னா் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








