திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடலூரில் மின்னல் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு: இருவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை பகுதியில் மின்னல் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா். அவருடன் இருந்த இரு இளைஞா்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image

மின்னல் பாய்ந்து உயிரிழந்த ஹரி.

Updated On :15 மே 2026, 11:30 pm IST

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை பகுதியில் மின்னல் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா். அவருடன் இருந்த இரு இளைஞா்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது . கடலூா் மாநகரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், புதுப்பாளையத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் ஹரிஹரன் (18), ராஜ் மகன் ரவி (18), வீரன் மகன் விஷால் ஆகியோா் வெள்ளிக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனா். அப்போது திடீரென சக்திவாய்ந்த மின்னல் ஹரிஹரன், ரவி மற்றும் விஷால் மீது தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளாா். அப்பகுதியில் இருந்தவா்கள் மூவரையும் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், ஹரிஹரன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். காயமடைந்த ரவி மற்றும் விஷால் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இந்த சம்பவம் குறித்து தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.