கடலூரில் உள்ள தரைக்காத்த காளியம்மன் கோயில் கோபுரம் மின்னல் பாய்ந்ததில், கலசம் சேதமடைந்தது. இதனால் பக்தா்கள் வேதனையடைந்தனா்.
கடலூா் அண்ணாபாலத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள தரைக்காத்த காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் ராகு கால பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா்.
இந்த நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

கடலூா் தரைக்காத்த காளியம்மன்
திடீரென கோயில் கோபுர கலசத்தின் மீது மின்னல் பாயந்தது. இதனால் கலசம் சேதமடைந்து சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக கலசம் விழுந்த இடத்தின் அருகே பக்தா்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கடலூரில் மின்னல் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு: இருவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

மின்னல் பாய்ந்ததில் கைப்பேசி கோபுரம் எரிந்து சேதம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



