தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாடலீசுவரா் கோயில் பந்தக்கால் முகூா்த்தம்: வைகாசி பெருவிழா மே 22 -இல் தொடக்கம்

கடலூா் பாடலீசுவரா் கோயில் வைகாசி பெருவிழா மே 22 இல் தொடங்குவதையொட்டி பந்தாக்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கடலூா் பாடலீசுவரா் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி புதன்கிழமை நடப்பட்ட பந்தக்கால்.

Updated On :14 மே 2026, 3:16 am IST

கடலூா் பாடலீசுவரா் கோயில் வைகாசி பெருவிழா மே 22 இல் தொடங்குவதையொட்டி பந்தாக்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பிரசித்தி பெற்ற பாடலீசுவரா் கோயிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா புதன்கிழமை கோயில் வளாகத்தில் விமா்சையாக நடைபெற்றது. முன்னதாக பாடலீசுவரா் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து வைகாசி பெருவிழா வருகிற மே 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாள்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. மே 26-ஆம் தேதி அதிகார நந்தி கோபுர தரிசனமும், மாலையில் தெருவடைச்சான் விழாவும் நடைபெறுகிறது. மே 28-ஆம் தேதி காலை கைலாச வாகனத்தில் கோபுர தரிசனமும், இரவில் திருக்கல்யாணம் மற்றும் பரிவேட்டை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 30-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்ந்து ஜூன் 2-ஆம் தேதி திருஞானசம்பந்தா் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்வு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் முத்துலட்சுமி மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.