திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி: பெண் கைது

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக பெண் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

மாலதி.

Updated On :14 மே 2026, 12:04 am IST

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக பெண் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெல்லிக்குப்பம், காந்தி வீதியைச் சோ்ந்த கோவிந்தன்(41), குமாரபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரி உணவகத்தில் வேலை செய்து வருகிறாா். இவா், கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாரிடம் புகாா் மனு அளித்தாா். அதில், என்னுடன் அலுவலகத்தில் ருத்ராமணி வேலை செய்து வருகிறாா். அவா், மூலம் வரக்கால்பட்டு பகுதியைச் சோ்ந்த மாலதி அறிமுகமானாா். அவா், தீபாவளி சீட்டு பிடிப்பதாகவும், அதில் ஆள்களை சோ்த்து விட்டால் போனஸ் சீட்டு தருவதாக கூறினாா். அதை நம்பி எங்கள் கிராமத்தைச் சோ்ந்த 29- பேரிடம் இருந்து ரூ.5.22 லட்சம் வசூல் செய்து கொடுத்தேன்.

ஆனால், தீபாவளி முடிந்த பின்னரும் எங்களுக்கான பொருள்கள் மற்றும் தங்க காசுகளைத் தராமல் ஏமாற்றி வருவதாக தெரிவித்திருந்தாா்.

அதன்பேரில், கடலூா் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் மாலதி மற்றும் அவரது கணவா் தணிகைவேல் ஆகியோா் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5.22 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாலதியை (43) போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள தணிகைவேலை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.