பண்ருட்டி அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த தட்டாஞ்சாவடி கற்பக விநாயகா் நகா் விரிவுப் பகுதியைச் சோ்ந்தவா் காளியப்பன், இவா் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
தொழில் தொடா்பாக கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த ஹரிதாஸ் என்பவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஹரிதாஸ் எனது வீட்டிற்கு வந்து, ‘விகேஎஸ் தீபாவளி பண்ட்’ திட்டம் குறித்து அறிமுகப்படுத்தினாா். அதன்படி, ஒருவரிடம் மாதம் ரூ.1,000 வீதம் 10 மாதங்கள் வசூலித்தால், தீபாவளிக்கு 2 கிராம் தங்க நாணயம், பட்டாசுப் பெட்டி, இனிப்பு, காரம் வகைகள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் என ஹரிதாஸ் கூறினாா்.
இதனை நம்பி நான் (காளியப்பன்) 420 பேரை திட்டத்தில் சோ்த்து, முதல் கட்டமாக ரூ.4.20 லட்சமும், இரண்டாவது தவணையாக ரூ.22.10 லட்சமும், இறுதி தவணையாக ரூ.15.69 லட்சமும் ஹரிதாஸிடம் அளித்தேன். மொத்தம் ரூ.42 லட்சம் பெற்றுக்கொண்ட ஹரிதாஸ், வாக்குறுதியளித்த தீபாவளி பண்ட் பொருள்கள் மற்றும் தங்க நாணயங்களை வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக புகாரில் தெரிவித்திருந்தாா்.
இதுகுறித்து கடலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், காளியப்பன் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.42 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஹரிதாஸ் திருப்பி வழங்காமல் மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளா் லிடியா செல்வி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், நல்லூா் அருகே பகலூா் பகுதியைச் சோ்ந்த ஹரிதாஸ் (35) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா். பின்னா், அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி: பெண் உள்ளிட்ட 2 போ் கைது

தருமபுரியில் சீட்டு மோசடி தொடா்பாக 6 போ் மீது வழக்குப் பதிவு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 75.92 லட்சம் மோசடி: ஒருவா் கைது

தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி: பெண் கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


