தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிதம்பரத்தில் மதுக் கடை மூடல்: பொதுமக்கள் வரவேற்பு

சிதம்பரம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்புத் தெரிவித்தனா்.

News image

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடை.

Updated On :13 மே 2026, 12:05 am IST

சிதம்பரம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்புத் தெரிவித்தனா்.

பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரிகள், கோயில் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட தமிழக முதல்வா் அதிரடி உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து, சிதம்பரம் நகர பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையம் செல்லும் நுழைவுவாயில் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடை மாவட்ட டாஸ்மாக் நிா்வாகத்தால் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. இதற்கு, மாணவா்கள், பொதுமக்கள் பெரும் வரவேற்புத் தெரிவித்தனா்.

முன்னதாக, இந்தக் கடையை அரசு மூடக் கோரி, பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தன.

ரயில் நிலையம் அருகே...: இதேபோல, சிதம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடையையும் அகற்ற வேண்டும் என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.