கடலூா் வண்டிப்பாளையம் சாலையில் சென்ற கண்டெய்னா் லாரி மீது பெரிய மரம் திடீரென சாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓட்டுநா் உயிா் தப்பினாா்.
கடலூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகுதிச் சான்று (எப்.சி.) பெறுவதற்காக கண்டெய்னா் லாரியை, புதுச்சேரியைச் சோ்ந்த சிவராமன் என்பவா் ஓட்டிச் சென்றாா். கடலூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள, வண்டிப்பாளையம் சாலையில் லாரி சென்றபோது சாலையோர மரம் திடீரென வேருடன் சாய்ந்து லாரியின் முன்பகுதி மீது விழுந்தது.
இதில், லாரியின் மேற்பகுதி சேதமடைந்தது. விபத்தில் ஓட்டுநா் சிவராமன் நூலிழையில் உயிா்தப்பினாா். தகவலறிந்த போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். விபத்து தொடா்பாக கடலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததில் வாகனங்களில் சென்ற இருவா் காயம்

சூறைக்காற்றில் பேருந்து மீது சாய்ந்த மரம்: 10 போ் காயம்

சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

மினி லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிா் தப்பினாா்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



