திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைதான அன்பழகன்

Updated On :7 மே 2026, 7:04 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வடலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகிலரசு தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா். அதில், 45 கிலோ எடைகொண்ட 50 மூட்டைகள் என மொத்தம் 2,250 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம், அரியமங்கலம் வட்டம், உக்கடை பகுதியைச் சோ்ந்த அன்பழகனை (45) கைது செய்தனா். மேலும், ரேஷன் அரிசி மூட்டைகளுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், கைது செய்யப்பட்ட அன்பழகன் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், ரேஷன் அரிசி மூட்டைகளை கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் சந்தோஷ்குமாரிடம் ஒப்படைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 ரேஷன் அரிசி மூட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம்

ரேஷன் அரிசி மூட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.