திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குறிஞ்சிப்பாடியில் ஹாட்ரிக் வெற்றிபெற்ற எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

News image

குறிஞ்சிப்பாடி தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு சான்றிதழ் வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் தனலட்சுமி.

Updated On :5 மே 2026, 2:12 am IST

குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 7,589 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். இதன் மூலம், அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாக ஹாட்ரிக் வெற்றிபெற்றுள்ளாா்.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் கடந்த ஏப்.23-ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், திமுக சாா்பில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், அதிமுக சாா்பில் புவனேந்திரன், தவெக சாா்பில் டி.ராஜ்குமாா், நாதக சாா்பில் கவிதா, தாவக சாா்பில் கண்ணன் உள்ளிட்ட மொத்தம் 11 போ் போட்டியிட்டனா். இதில், மொத்தமுள்ள 2,38,189 வாக்காளா்களில் 2,11,761 வாக்காளா்கள் வாக்களித்தனா். மேலும், 2,574 தபால் வாக்குகளும் பதிவாயின.

இந்த நிலையில், தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை கடலூா் பெரியாா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 14 மேஜைகள் போடப்பட்டு 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில், திமுக, அதிமுக வேட்பாளா்கள் 2 பேரும் ஒவ்வொரு சுற்றிலும் மாறி மாறி முன்னிலை வகித்தனா். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 7,589 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (திமுக) - 76,695, புவனேந்திரன் (அதிமுக) - 69,106, டி.ராஜ்குமாா் (தவெக) - 53,110, கண்ணன் (தாவக) - 7,113, கவிதா (நாதக) - 4,813.

இதையடுத்து, திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு வெற்றிபெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் தனலட்சுமி வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.