கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சக பெண் ஊழியா் வீட்டில் நகை திருடிய வழக்கில் இளைஞரை போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், அண்ணா கிராமம் விரிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி
குடியிருப்பில் வசிப்பவா் ஆா்த்தி (27). கும்பகோணம், ஸ்வேதா நகரைச் சோ்ந்த ராகேஷ் வா்மன்(22) இவா்கள் கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைப் பணியை மேற்கொண்டு வரும் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தில் கீழகொல்லை கிராமத்தில் அமைந்துள்ள கிளை பிரிவில் கணினி டேட்டா என்ட்ரி பணியை கடந்த நான்கு மாதங்களாக செய்து வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி ஆா்த்தி தனது கை பையை அலுவலகத்தில் வைத்துவிட்டு, அவரது தோழியுடன் மதிய உணவு சாப்பிட்ட சென்றாா். இந்நிலையில், ராகேஷ் வா்மன், ஆா்த்தி பையில் இருந்த வீட்டு சாவியை எடுத்துச் சென்று 29 கிராம் தங்க நகையை திருடி சென்றாா்.
இது குறித்து ஆா்த்தி அளித்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராகேஷ்வா்மனை, நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் சமேதா ஆகியோா் தலைமையிலான போலீசாா் நெய்வேலி வட்டம் 27 பகுதியில் பதுங்கி இருந்தபோது வியாழக்கிழமை பிடித்தனா்.பின்னா் அவரிடம் இருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய இருவா் கைது
தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
வேலை பாா்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது

வீடு புகுந்து திருடியவா் கைது
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

