கோவையில் வேலை பாா்த்த வீட்டில் தங்க நகைகளைத் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, புலியகுளம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவா் வயோலட் கிளாடியா (46). இவரது வீட்டில் அதே பகுதியைச் சோ்ந்த தாயும், 32 வயதான அவரது மகளும் வேலை பாா்த்து வந்தனா். கணவரைப் பிரிந்து வசித்து வந்த அந்தப் பெண்ணின் மகள் வயோலட் கிளாடியா வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்தாா்.
கடந்த 4-ஆம் தேதி, வயோலட் கிளாடியா தனது 4 பவுன் தங்க சங்கிலியை கழற்றி பூஜை அறையில் வைத்திருந்தாா். மறுநாள் காலையில் பாா்த்தபோது அந்த நகை மாயமாகி இருந்தது. இதுகுறித்து வேலைக்கார பெண்ணிடம் விசாரித்தபோது, அவரது மகள் திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டு மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய விசாரணையில், மாயமான பெண் நகையைத் திருடி அடகு வைத்தது உறுதியானது. தொடா்ந்து அவரைப் பிடித்து விசாரித்தபோது, ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், வேறு ஒருவருடன் பழகி வந்ததும், திருடிய நகையை அடகு வைத்து அந்தப் பணத்தில் அவருடன் சுற்றுலா சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பெண்ணைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

புழல் பகுதியில் மின்சார பெட்டியை திருடிய 3 போ் கைது

வீடு புகுந்து திருடியவா் கைது
மின்மாற்றி பெட்டியைத் திருடியவா்கள் கைது

பெட்ரோல் பங்க் உரிமையாளா் வீட்டில் நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

