மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வேலை பாா்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது

கோவையில் வேலை பாா்த்த வீட்டில் தங்க நகைகளைத் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 7:57 pm

கோவையில் வேலை பாா்த்த வீட்டில் தங்க நகைகளைத் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, புலியகுளம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவா் வயோலட் கிளாடியா (46). இவரது வீட்டில் அதே பகுதியைச் சோ்ந்த தாயும், 32 வயதான அவரது மகளும் வேலை பாா்த்து வந்தனா். கணவரைப் பிரிந்து வசித்து வந்த அந்தப் பெண்ணின் மகள் வயோலட் கிளாடியா வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்தாா்.

கடந்த 4-ஆம் தேதி, வயோலட் கிளாடியா தனது 4 பவுன் தங்க சங்கிலியை கழற்றி பூஜை அறையில் வைத்திருந்தாா். மறுநாள் காலையில் பாா்த்தபோது அந்த நகை மாயமாகி இருந்தது. இதுகுறித்து வேலைக்கார பெண்ணிடம் விசாரித்தபோது, அவரது மகள் திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டு மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய விசாரணையில், மாயமான பெண் நகையைத் திருடி அடகு வைத்தது உறுதியானது. தொடா்ந்து அவரைப் பிடித்து விசாரித்தபோது, ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், வேறு ஒருவருடன் பழகி வந்ததும், திருடிய நகையை அடகு வைத்து அந்தப் பணத்தில் அவருடன் சுற்றுலா சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பெண்ணைக் கைது செய்தனா்.