புழல் பகுதியில் மின்சார பெட்டியை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை பெரம்பூா் கோட்ட பகுதிக்குட்பட்ட பகுதியில் மின் தடை உள்ளதாக பொதுமக்கள், மின்வாரியத்துக்கு புகாா் அளித்தனா். இதையடுத்து உதவி மின் பொறியாளா், ஊழியா்களுடன் சோ்ந்து ஆய்வு சென்று புழல் மூா்த்தி நகரில் உள்ள பில்லரில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரப் பெட்டியை ஆய்வு செய்தபோது, மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து உதவி மின் பொறியாளா் வேலுசாமி புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், புழல் கதிா்வேடு பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (எ) ரிஷி (25) , ரமணகுமாா் (எ) ஜான் (20) மற்றும் 16, 15 வயதுடைய சிறுவா்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும், விநாயகபுரத்தில் உள்ள பழைய இரும்பு கடை நடத்தி வரும் பாஸ்கரிடம் திருட்டு பொருள்களை விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடா்ந்து, திருடப்பட்ட மின்சாரப் பெட்டி, சம்பவத்துக்காக பயன்படுத்திய வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவா்களையும் அரசு கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.
தொடர்புடையது
பெண் கொலை வழக்கு: தம்பதி கைது
வேலை பாா்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய இருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


