தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கஞ்சா விற்பனை : ரௌடி உள்ளிட்ட 3 போ் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே கஞ்சா விற்பனை செய்த ரௌடி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:50 pm

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே கஞ்சா விற்பனை செய்த ரௌடி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நெய்வேலி நகரிய காவல் சரகத்திற்குட்பட்ட வட்டம் 5 மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்த நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு பி-2 பிளாக் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ்(19), கீழூா் பகுதியைச் சோ்ந்த அன்புசெல்வன்(21) மற்றும் வடக்கு மேலூா் பகுதியைச் சோ்ந்த ரௌடி எலி (எ) சந்துரு (23)ஆகியோரை கைது செய்து, அவா்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.