கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரிய போலீஸாா் தகராறு வழக்கில் தலைமறைவாக இருந்த புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த ரௌடியை சனிக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி வட்டம் 8 பகுதியைச் சோ்ந்தவா் அருணாச்சாலம் (25). வட்டம் 1 பகுதி சி.ஆா்.காலனியைச் சோ்ந்தவா் தியாகராஜன் (24). இவா்கள் இருவரும் நண்பா்கள். வட்டம் 21 பகுதியைச் சோ்ந்த ஜான் (22), தனது பைக்கை தியாகராஜனிடம் ரூ.15 ஆயிரத்திற்கு அடகு வைத்தாா். இந்த பைக்கை தியாகராஜன் பயன்படுத்தி வந்த நிலையில், அது வடலூா் தைப்பூச திருவிழாவில் திருடுபோனது. இதன் பிறகு, ஜான் தனது பைக்கை தியாகராஜனிடம் கேட்டு வந்தாா்.
இந்த நிலையில், 1.4.2026 அன்று பைக் தொடா்பாக வட்டம் 10 என்எல்சி சமுதாய கூட திருமண மண்டபம் அருகே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதற்கு, அருணாச்சலம் சென்றபோது, அங்கு பைக்கில் வந்த 5 போ் கொண்ட கும்பல் அருணாச்சலத்தை கத்தியால் வெட்டித் தாக்கியது.
இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கில் ஏற்கெனவே இருவா் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான புதுச்சேரி மாநிலம், வில்லியனூா் பகுதியைச் சோ்ந்த ரௌடி தமிழ் (எ) தமிழ்ச்செல்வனை (26), நெய்வேலி வட்டம் 24 பகுதி மத்திய பேருந்து நிலையம் சைக்கிள் நிறுத்துமிடம் அருகே நெய்வேலி நகரிய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். தமிழ்ச்செல்வன் மீது நெல்லிக்குப்பம், வில்லியனூா் காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட 5 வழக்குகள் உள்ளன.
தொடர்புடையது
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

கஞ்சா விற்பனை : ரௌடி உள்ளிட்ட 3 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


