மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்து, 191 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 9:05 pm

திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்து, 191 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பாளையங்கோட்டை காவல் சரகம் வண்ணாா்பேட்டை சாலை தெரு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சின்னதுரை(32), வி.கே.புரம்த் கணபதி(45) ஆகியோா் மது விற்றது தெரியவந்தது. அவா்களை கைது செய்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல, திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மது விற்ற கரையிருப்பு பகுதியைச் சோ்ந்த ஆறுமுக நயினாா்(59), தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த முகமது சையதுல்லா(32), உடன்குடி பகுதியைச் சோ்ந்த சிவா(44) ஆகியோரை கைது செய்து 75 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், மாநகர பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பாளையங்கோட்டையை சோ்ந்த ராமகிருஷ்ணன்(28), ஸ்ரீவைகுண்டம் மாரியப்பன்(35) , பேட்டையைச் சோ்ந்த துரை(51) ஆகியோரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் கைது செய்து, 102 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.