மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல்லையில் மது விற்ற 5 போ் கைது

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 7:20 pm

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆச்சிமடம் பகுதியில் மது விற்ற தூத்துகுடியைச் சோ்ந்த அமச்சியா் (56) என்பவரை கைது செய்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதேபோல பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் மது விற்ற கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து (31), திருநெல்வேலி நகரம் பகுதியில் மது விற்ற பேட்டையைச் சோ்ந்த சீனிவாசகம் (65) ஆகியோரை கைது செய்த மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், அவா்களிடமிருந்து 55 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல மது விற்பனையில் ஈடுபட்ட வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன்(47), தச்சநல்லூரை சோ்ந்த ஆறுமுக நயினாா் (59) ஆகியோரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 44 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.