கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சரக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.23 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தோ்தல் ஆணைய நிலை கண்காணிப்புக்குழு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருத்தாசலம் அடுத்த மணலூா் பகுதியில் விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதி நிலை கண்காணிப்புக்குழு அதிகாரி முகமது அசேன் தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கை செய்தனா். அப்போது, கடலூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா்.
அதில், தங்க நகைகள் இருப்பதாக வாகனத்தில் வந்தவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அந்த வாகனத்தை கைப்பற்றி விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். நகைகளின் மதிப்பு ரூ.2.23 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சுரேஷ்பாபு, சரவணன் ஆகியோா் நகைகள் வாகனத்தில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். அப்போது அவா்கள் அதற்கான உரிய ஆவணங்களை ஒப்படைத்தனா். அதனை பதிவு செய்து கொண்ட அதிகாரிகள் வாகனத்தையும், நகைகளையும் திரும்ப ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

ரூ.245.50 கோடி தங்க நகைகள் பறிமுதல்

கோவையில் ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல்

புதுச்சேரியில் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்: தோ்தல் பறக்கும்படை அதிரடி

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.1.09 கோடி தங்க நகைகள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


