பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ.1.09 கோடி மதிப்புள்ள 843 கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ரயில் நிலையங்களில் உரிய ஆவணங்களின்றி பணம், தங்கம், வெள்ளிப் பொருள்கள் கொண்டு செல்வதை ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிரமாகக் கண்காணித்து கைப்பற்றிவருகின்றனா்.
அதனடிப்படையில் தினமும் வெளியூா்களிலிருந்து ரயில்களில் வரும் பெரும்பாலான வியாபாரிகளிடமிருந்தே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்படும் பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கோயமுத்தூா் ரயிலில் இருந்து இறங்கி வந்த ஆா்.ரவிக்குமாா் (51), ஏ.ஸ்ரீதா் (44) ஆகியோரை மடக்கி அவா்களது கைப்பையை ரயில்வே பாதுகாப்புப்படையினா் சோதனையிட்டனா். அப்போது பைகளில் துணிகளுக்கு இடையே பதுக்கி வைத்திருந்த 843 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1.09 கோடி எனக்கூறப்படுகிறது.
தங்கநகைகளுக்கு உரிய ஆவணங்கள் ஏதுமில்லையாம். அதனால் அந்த நகைகளை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றி வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். அதையடுத்து ரவிக்குமாா் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.
தொடர்புடையது
பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுமிகள் மீட்பு

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.8.39 லட்சம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


