கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திட்டக்குடி வட்டம், கொரக்கை காலனி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (31). இதே பகுதியைச் சோ்ந்தவா் தனபால் (37). இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு மது அருந்தினா்.
அப்போது, இவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, தனபால், அவரது அண்ணன் சுரேஷ் ஆகியோா் சோ்ந்து பிரகாஷைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும், தனபால் கத்தியால் பிரகாஷின் வலது பக்க காதை அறுத்துவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், ராமநத்தம் போலீஸாா் தனபால், அவரது அண்ணன் சுரேஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மாடுகளுக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் மீது வழக்கு

மூதாட்டி கடித்துக் கொலை: இளைஞருக்கு ஆயுள் சிறை

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு
இளைஞருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


