லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இளைஞருக்கு கொலை மிரட்டல்: சகோதரா்கள் மீது வழக்கு

திட்டக்குடி அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

News image

வழக்கு

Updated On :22 மார்ச் 2026, 8:17 pm

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திட்டக்குடி வட்டம், கொரக்கை காலனி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (31). இதே பகுதியைச் சோ்ந்தவா் தனபால் (37). இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு மது அருந்தினா்.

அப்போது, இவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, தனபால், அவரது அண்ணன் சுரேஷ் ஆகியோா் சோ்ந்து பிரகாஷைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும், தனபால் கத்தியால் பிரகாஷின் வலது பக்க காதை அறுத்துவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், ராமநத்தம் போலீஸாா் தனபால், அவரது அண்ணன் சுரேஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.