கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த ஊ.மங்கலம் அருகே 8 மாடுகளை அரிவாளால் வெட்டியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருத்தாசலம் வட்டம், ஊ.மங்கலத்தை அடுத்த காட்டுகூனங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி செல்வராஜ் (56), ஹோமியோபதி மருத்துவா் மற்றும் கால்நடைகள் வளா்த்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஆதவ முருகன் ஜவஹருக்கும் இடையே விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச குழாய் கொண்டு செல்வது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
கடந்த மாா்ச் 31-ஆம் தேதியன்று அந்தோணி செல்வராஜ் தனக்குச் சொந்தமான 8 மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிட்டாா். இந்த மாடுகள் ஆதவ முருகன் ஜவஹா் வயலுக்கு சென்றது. இதனால், ஆத்திரமடைந்த அவா் 8 மாடுகளையும் அரிவாளால் வெட்டி காயப்படுத்தினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு

இளைஞருக்கு கொலை மிரட்டல்: சகோதரா்கள் மீது வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


