திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இளைஞருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 10:20 pm

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருத்தாசலம் வட்டம், சின்ன கண்டியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (31). இவா், கடந்த 22-ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் விவசாய வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

சின்ன கண்டியாங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அதே கிராமத்தைச் சோ்ந்த கரும்பாயிரம் (37) வழிமறித்து மது வாங்கி கொடுக்கும்படி கேட்டாராம். இதற்கு பணம் இல்லை என பிரபாகரன் கூறியதால், ஆத்திரமடைந்த கரும்பாயிரம் பீா் புட்டி மற்றும் வண்டி சாவியால் கண்ணத்தில் குத்தி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

அங்கிருந்தவா்கள் காயமடைந்த பிரபாகரனை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து கரும்பாயிரத்தை கைது செய்தனா்.