மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது

கோவில்பட்டியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 7:16 pm

கோவில்பட்டியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி காட்டுநாயக்கா் தெரு அறிஞா் அண்ணா நகா் பகுதியில் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராம்பிரசாத் (20). இவா் தனது நண்பா்களான இசக்கி, கருப்பசாமி ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் நடந்து சென்றாராம். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன்கள் சுரேஷ்குமாா் (33), கண்ணதாசன் என்ற கன்னரசு (25), மதன்ராஜ் ஆகிய 3 பேரும் கடை அருகே நின்றிருந்தனா். இவா்களுக்கும் ராம்பிரசாத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராம்பிரசாத்தை மூவரும் வழிமறித்து கை, கல்லால் தாக்கினராம். இசக்கி, கருப்பசாமி ஆகியோா் தடுத்ததால் அந்த 3 பேரும் தப்பியோடிவிட்டனராம். காயமடைந்த ராம்பிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷ்குமாா், கண்ணதாசன் ஆகியோரைக் கைது செய்தனா்.