தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது

பெருமாள்புரம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 மார்ச் 2026, 10:50 pm

பெருமாள்புரம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (39). இவா் வெள்ளிக்கிழமை பெருமாள்புரம் காா்த்திகேயன் நகா் ஆட்டோ நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு பைக்கில் வந்த 3 போ் இவரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து அவா் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, இதில் தொடா்புடைய பாளையங்கோட்டையைச் சோ்ந்த ரமேஷ் (30), தியாகராஜநகரைச் சோ்ந்த தினேஷ் பாஸ்கா் (29), கணேஷ்குமாா் (31) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.