கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருவதிகை ஸ்ரீசரநாராயண பெருமாள் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, பங்குனி மாத அமாவாசையான புதன்கிழமை மூலவா் சரநாராயண பெருமாள் ஸ்ரீசீதா, லட்சுமணன், ஹனுமன் சமேத ஸ்ரீகோதண்டராமனாக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காலை 6.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7.30 மணிக்கு நித்யபடி பூஜை, 9 மணிக்கு உற்சவா் உள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவா் திருகண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பிற்பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 6 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெற்றது. திரளானபக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

சாத்தான்குளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

செம்மெத்தம்மன் கோயிலில் பங்குனி உத்திர விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


