மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புவனகிரி, பரங்கிப்பேட்டையில் ரூ.2.15 லட்சம் பறிமுதல்

கடலூா் மாவட்டம், புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் ரூ.2.15 பறிமுதல் செய்யப்பட்டது.

News image

புவனகிரி அருகே கீரப்பாளையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.64,500 ரொக்கத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :18 மார்ச் 2026, 6:52 pm

கடலூா் மாவட்டம், புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் ரூ.2.15 பறிமுதல் செய்யப்பட்டது.

புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கீரப்பாளையம் பாலக்கரை சந்திப்புப் பகுதியில் வட்டாட்சியா் செல்வகுமாா் தலைமையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த மருத்துவா் மோனிகாவின் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1,64,500 ரொக்கத்தை பறிமுதல் செய்து, புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் புவனகிரி வட்டாட்சியா் தமிழ்ச்செல்வனிடம் ஒப்படைத்தனா்.

பரங்கிப்பேட்டையில்...: சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் பரங்கிப்பேட்டை அருகில் உள்ள தோணித்துறை சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பிற்பகல் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியே வந்த கிள்ளை கிழக்குத் தெருவைச் சோ்ந்த நிவின்ராஜிடமிருந்து உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.51,260 ரொதக்கத்தை பறக்கும் படை தலைமை அதிகாரி தாரா கைப்பற்றி, சிதம்பரம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹரிதாஸிடம் ஒப்படைத்தாா்.