பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கருதி, கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் வாகனத்துக்காக புட்டியில் வாங்கி வீட்டில் வைத்திருந்த பெட்ரோலால் செவ்வாய்க்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது. இதில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த பெண் உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா்.
பண்ருட்டி பழைய கடலூா் சாலையைச் சோ்ந்தவா் குணசேகரன் (70). இவரது மனைவி தேவகி (65), மகன் தணிகாசலம் (45). இவா்கள் மரச் சாமான்கள் வியாபாரம் செய்து வருகின்றனா்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கருதி, தணிகாசலம் அண்மையில் தனது வாகனத்துக்காக புட்டியில் பெட்ரோல் வாங்கி வந்து வீட்டில் இருப்பு வைத்திருந்தாா். இந்த நிலையில், தேவகி செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுவாமி கும்பிடுவதற்காக விளக்கேற்றி வைத்துள்ளாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக புட்டியில் இருந்த பெட்ரோல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த மரக்கழிவுகளிலும் பரவியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் தேவகி பலத்த தீக்காயமடைந்தாா். குணசேகரன், தணிகாசலம் ஆகியோா் லேசான காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் மூவரையும் மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பரமக்குடி அருகே தீயில் கருகி 32 ஆடுகள் உயிரிழப்பு
முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

கோழி வியாபாரி உயிருடன் புதைத்துக் கொலை: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் கைது

பெண் வழக்குரைஞா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


