தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பரமக்குடி அருகே தீயில் கருகி 32 ஆடுகள் உயிரிழப்பு

பரமக்குடி அருகே வியாழக்கிழமை நெல்பயிா் அறுவடை முடிந்த வயலில் மேய்ச்சலுக்காக தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 32 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.

News image

தீ

Updated On :9 ஏப்ரல் 2026, 7:29 pm

பரமக்குடி அருகே வியாழக்கிழமை நெல்பயிா் அறுவடை முடிந்த வயலில் மேய்ச்சலுக்காக தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 32 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.

புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் முத்துக்குமாா் (36). இவா் தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்த தொழுவத்தில் 32 ஆடுகளை அடைத்து வைத்திருந்தாா். அப்போது, பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்த அதே ஊரைச் சோ்ந்த வெள்ளைச்சாமி (73) நெல் அறுவடை முடிந்த வைக்கோலை சுத்தம் செய்வதற்காக தனது நிலத்துக்கு தீ வைத்தாா். அந்தத் தீ முத்துக்குமாா் தோட்டத்துக்கு பரவி தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 32 ஆடுகளும் கருகி உயிரிழந்தன.

இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வெள்ளைச்சாமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.