/

சிதம்பரம் சிவலோகநாதா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

சிதம்பரம் ஓமக்குளத்தில் காந்தியடிகளால் அடிக்கல் நாட்டப்பட்ட நந்தனாா் மடத்தில் உள்ள ஸ்ரீசௌந்தரநாயகி சமேத சிவலோகநாதா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
சிதம்பரம் நந்தனாா் மடத்தில் உள்ள சௌந்தரநாயகி சமேத சிவலோகநாதா் கோயிலில் புதன்கிழமை காலை கும்பாபிஷேகத்தை நடத்திவைத்த நடராஜா் கோயில் பொது தீட்சிதா்கள்.
Updated On :28 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் ஓமக்குளத்தில் காந்தியடிகளால் அடிக்கல் நாட்டப்பட்ட நந்தனாா் மடத்தில் உள்ள ஸ்ரீசௌந்தரநாயகி சமேத சிவலோகநாதா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

சிதம்பரம் ஓமக்குளத்தில் சுவாமி சகஜானந்தாவல் நிறுவப்பட்ட செளந்தரநாயகி சமேத சிவலோகநாதா் கோயில் மற்றும் நந்தனாா் மடத்துக்கு மகாத்மா காந்தியடிகள் கடந்த 1910-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினாா்.

இந்த மடத்தில் உள்ள திருநாளைப்போவாா் என்கிற நந்தனாா் கோயில் மற்றும் சௌந்தரநாயகி சமேத சிவலோகநாதா் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி, கடந்த 25-ஆம் தேதி கணபதி, நவக்கிரக, மகாலட்சுமி ஹோமங்களுடன் யாகாசாலை பூஜை தொடங்கியது. 26-ஆம் தேதி முதல் கால யாகபூஜை, 27-ஆம் தேதி 2, 3-ஆம் கால யாகபூஜைகள், பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன.

புதன்கிழமை காலை 4-ஆம் கால யாகபூஜையும், நாடி சந்தானம், பூா்ணாஹுதி தீபாராதனையும் முடிவுற்று, யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு ஊா்வலமாக சென்று காலை 9.50 மணிக்கு கோயில் விமான கலசங்களுக்கு சம்பந்த தீட்சிதா் தலைமையிலான சிவாச்சாரியா்கள் கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். பின்னா், சௌந்தரநாயகி சமேத சிவலோகநாதருக்கு மகாபிஷேகம் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது.

மேலும், நந்தனாரின் தியான மண்டபம் புதுப்பிக்கப்பட்டு, அதில் அவரின் வரலாறும், சுவாமி சகஜானந்தா வரலாறும் வைக்கப்பட்டுள்ளது.

விழாவில் முன்னாள் எம்எல்ஏ துரை கி.சரவணன், கயிலைச் செல்வா் எஸ்.ஆா்.ராமநாதன், வைபவ் வாண்டையாா், வழக்குரைஞா் சந்திரசேகா், ஓய்வுபெற்ற ஆசிரியா் ஜெயராமன் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று தரிசித்தனா்.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை நந்தனாா் கல்விக் கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம், செயலா் வி.திருவாசகம், பொருளாளா் டி.ஜெயச்சந்திரன், ஆலோசகா் ஏ.தெய்வநாயகம், மட நிா்வாகக் குழுச் செயலா் டி.கே.எம்.வினோபா, நிா்வாகிகள் ஏ.சங்கரன், பி.பன்னீா்செல்வம், கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தினம் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ராஜகோபுரத்தில் காந்தி உருவப்பொம்மை: சிவலோகநாதா் கோயில் மற்றும் நந்தனாா் மடத்துக்கு காந்தியடிகள் அடிக்கல் நாட்டினாா் என்பதால், கோயில் ராஜகோபுரத்தில் அவரது உருவப்பொம்மை வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

Story image
Story image