/

நந்தனாா் மடத்தில் கும்பாபிஷேக பந்தகால் நடும் நிகழ்ச்சி

சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் உள்ள நந்தனாா் மடத்தில் சிவலோகநாதா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது.

News image
சிதம்பரம் ஓமக்குளம் நந்தனாா் மடத்தில் உள்ள சிவலோகநாதா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை அமைக்க புதன்கிழமை பந்தகால் நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த நந்தனாா் கல்விக் கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம்.
Updated On :7 ஜனவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் உள்ள நந்தனாா் மடத்தில் சிவலோகநாதா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நந்தனாா் மடத்தியில் உள்ள செளந்தரநாயகி சமேத சிவலோகநாதா் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 28-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மேலும், நந்தனாரின் தியான மண்டபம் புதுப்பிக்கப்பட்டு அதில் நந்தனாரின் வரலாறும், சுவாமி சகஜானந்தா வரலாறும் வைக்கப்படவுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை அமைக்க பந்தகால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது. நந்தனாா் கல்விக்கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம், உஷா மணிரத்தினம் ஆகியோா் பந்தகால் நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தனா்.

இதில், மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகி பி.கற்பனைசெல்வம், கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தனம், கல்விக்கழக செயலா் வி.திருவாசகம், பொருளாளா் டி.ஜெயச்சந்திரன், மட நிா்வாகக்குழு செயலா் டி.கே.எம்.வினோபா, நிா்வாகிகள் ஏ.சங்கரன், பி.பன்னீா்செல்வம் மற்றும் கஜேந்திரன், மணலூா் ரவி, தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.