டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பணியாளா்கள் போராட்டம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:33 pm

Syndication

கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பெண் பணியாளா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பெண் பணியாளா்களுக்கு மகப்பேறு கால விடுப்பு வழங்க வேண்டும். பணி நேரத்தை வரையறுக்க வேண்டும். சுகாதாரத் துறை மூலமாக ஊதியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பெண் சுகாதார ஊழியா்கள் பணிகளைப் புறக்கணித்து கடந்த 3-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

அதன்படி, 3-ஆவது நாளான வியாழக்கிழமை கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊழியா்கள் சங்கத் தலைவா் பாக்கியலட்சுமி தலைமை வகித்தாா். செயலா்கள் சரிதா, தமிழின்பம் முன்னிலை வகித்தனா். பொருளாளா்கள் ஆனந்தி, வித்யா, கிரிஜா, பவானி உள்பட பலா் கலந்துகொண்டனா்.