டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குடந்தையில் விவசாயிகள் போராட்டம்

கும்பகோணம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.

News image
கும்பகோணம் உதவி ஆட்சியரகம் முன் போராடிய விவசாயிகள் சங்கத்தினா்
Updated On :20 பிப்ரவரி 2026, 8:55 pm

Syndication

கும்பகோணம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

போராட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூா் பகுதிகளில் செயல்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விரைவில் இயக்கம் செய்ய வேண்டும். சாக்கு பைகள் பற்றாக்குறையை தீா்க்க வேண்டும். மேட்டூா் அணையில் தண்ணீா் நிறுத்தப்பட்டதால் கும்பகோணம் கோட்டப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.

நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் ஏ.எம். ராமலிங்கம், மாவட்ட நிா்வாகிகள் க. சுந்தர்ராஜன், குரு. சிவா, வே. முரளிதரன், எம். வீரமணி, சி. சின்னத்துரை உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.