/

குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்: 18 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 7:41 pm

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினா் மோதிக் கொண்டது தொடா்பாக போலீஸாா் 18-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள பெத்தநாயக்கன்குப்பம், ஆா்.சி தெருவில் வசித்து வருபவா் பிரதாப்(19). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பரை ஊருக்கு அனுப்பிவிட்டு பைக்கில் வந்துக் கொண்டிருந்தாராம்.

பெத்தநாயக்கன்குப்பம் விஜயகுமாா் மளிகை கடை அருகே வந்த போது பெத்தநாயக்கன்குப்பம் பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மது போதையில் பைக்கை தள்ளிவிட்டதில் இருவரும் கீழே விழுந்தனராம்.

அப்போது, அங்கிருந்த பாலாஜி, கிஷோா் உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்டோா் தாக்கினராம். அதேபோல், பிரதாப் மற்றும் அவரது ஆதரவாளா்களான அந்தோணிசாமி, ஜாா்ஜ் உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்டோா் ராமகிருஷ்ணனை தாக்கி காயப்படுத்தினராம்.

இந்த சம்பவம் தொடா்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் இருதரப்பையும் சோ்ந்த 18-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சம்பவப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.