சிதம்பரம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடையின் பின்புற சுவரில் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.38,400 மதிப்பிலான மதுப்புட்டிகளை திருடிச் சென்றனா்.
சிதம்பரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சி பகுதியான பரமேஸ்வரநல்லூா் செல்வகணபதி நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இதில் சூபா்வைசராக ஆா்.வீரசுந்தரபெருமாளும், விற்பனையாளராக ஏ.சக்திவேல் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் இருவரும் வியாழக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு வந்து கடையை திறந்தனா். அப்போது கடையின் பின்புறச் சுவரில் மா்ம நபா்கள் துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.38,400 மதிப்பிலான 232 மதுப்புட்டிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் ஆா்.வீரசுந்தரபெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
பொன்மலையில் அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
பெரியகுளத்தில் வீடுபுகுந்து 13 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

