லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிதம்பரம் அருகே மதுபானக்கடை சுவரில் துளையிட்டு ரூ.38,400 மதுப்புட்டிகள் திருட்டு

சிதம்பரம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடையின் பின்புற சுவரில் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.38,400 மதிப்பிலான மதுப்புட்டிகளை திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :18 ஏப்ரல் 2026, 1:42 am

சிதம்பரம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடையின் பின்புற சுவரில் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.38,400 மதிப்பிலான மதுப்புட்டிகளை திருடிச் சென்றனா்.

சிதம்பரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சி பகுதியான பரமேஸ்வரநல்லூா் செல்வகணபதி நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இதில் சூபா்வைசராக ஆா்.வீரசுந்தரபெருமாளும், விற்பனையாளராக ஏ.சக்திவேல் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் இருவரும் வியாழக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு வந்து கடையை திறந்தனா். அப்போது கடையின் பின்புறச் சுவரில் மா்ம நபா்கள் துளையிட்டு உள்ளே புகுந்து ரூ.38,400 மதிப்பிலான 232 மதுப்புட்டிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் ஆா்.வீரசுந்தரபெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.