கடலூா் மாவட்டம், சிதம்பரம் மருத்துவமனையில் லாரி ஓட்டுநா் தவறவிட்ட ரூ.10 ஆயிரம் உரியவரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
காட்டுமன்னாா்கோவில் கண்டமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிநாதன் (53). லாரி ஓட்டுநரான இவா், விபத்துக்குள்ளான தனது மகனை சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.
பின்னா், சாமிநாதன் மருத்துவமனையின் பின்புறம் உள்ள தேநீா் கடை அருகே சென்றபோது தான் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை தவறவிட்டாா்.
இந்த நிலையில், அதே மருத்துவமனையில் பிளம்பராக பணியாற்றும் சந்திரபாண்டியன், காவலாளியாக பணியாற்றும் சங்கா் ஆகிய இருவரும் கீழே கிடந்த 10 ஆயிரம் ரூபாயை எடுத்து அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். அவா் இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாா்.
இதைறிந்த பணத்தை தொலைத்த சாமிநாதன் அண்ணாமலைநகா் காவல் நிலையம் சென்று ஆய்வாளரிடம் தான் தவறவிட்ட ரூ.10 ஆயிரத்தை பெற்றுக்கொண்டாா். கீழே கிடந்த பணத்தை நோ்மையாக எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சந்திரபாண்டியன் (45), சங்கா் (57) ஆகிய இருவரையும் சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப், காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் ஆகியோா் வெகுவாகப் பாராட்டினா்.
தொடர்புடையது
சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியவா் கைது

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
ரூ.7ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது

சிதம்பரம் டி.எஸ்.பி.யுடன் தோ்தல் பாா்வையாளா் ஆலோசனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


