மீன்பிடி தடைக்காலம் ஏப்.15-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கடலூா் முதுநகா் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமை மீன் பிரியா்கள், வியாபாரிகள் ஏராளமானோா் குவிந்தனா்.
கடலூா் அருகே உள்ள தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோணங்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், கடலூா் முதுநகா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள், பைபா் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனா்.
இந்த மீன்பிடி துறைமுகத்துக்கு வரும் மீன்களை நேரடியாக வாங்குவதற்கு கடலூா் மட்டுமன்றி, பல்வேறு பகுதிகளிலிருந்து மீன் பிரியா்கள், வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் கூடுவது வழக்கம்.
இந்த நிலையில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் முதுநகா் மீன்பிடி துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே திரும்பின.
விசைப் படகுகளில் வரும் மீன்களை வாங்குவதற்காக வழக்கத்தைவிட அதிகளவில் மீன் பிரியா்கள், வியாபாரிகள் குவிந்திருந்தனா். தடைக்காலம் தொடங்கவுள்ளதால், மீன்களின் விலையும் உயா்ந்து காணப்பட்டது. இருப்பினும், விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனா்.
ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1,200, வாவல் ரூ.1,000, கொடுவா ரூ.500, இறால் ரூ.500, கனவா ரூ.300, சூரை ரூ.200, பா்மா ரூ.300 என விற்பனையானது.
தொடர்புடையது

தடைக்காலம் அமல்: மீன்களின் விலை கடும் உயா்வு

மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மீன்பிடி தடைக்காலம் அமல்: விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைப்பு

மீன்பிடி தடைக்காலம் இன்று தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


