மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தடைக்காலம் அமல்: மீன்களின் விலை கடும் உயா்வு

திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது.

News image

தூத்துக்குடியில் மீன்களின் விலை குறைந்திருந்ததால் மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கிச் செல்லும் பொதுமக்களும், வியாபாரிகளும்.

Updated On :18 ஏப்ரல் 2026, 8:44 pm

மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது. இதனால் மீன்களின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப் படகுகள், போதிய மீன்கள் கிடைக்காததால் குறைவான நாட்டுப் படகுகளே சனிக்கிழமை கரை திரும்பின.

கோடை விடுமுறை காலம் என்பதால், மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக மீன்களின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது.

வஞ்சிரம் எனப்படும் சீலா மீன் கிலோ ரூ. 1,300 முதல் ரூ. 1,500 வரையும், விளை, ஊழி, பாறை ஆகிய ரக மீன்கள் கிலோ ரூ. 500 முதல் ரூ. 750 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரையும், முண்டக்கண்ணி பாறை ஒரு கூடை ரூ. 2,000 வரையும், வங்கனை ஒரு கூடை ரூ. 3000 வரையும், நண்டு ஒரு கிலோ ரூ. 900 வரையும், கிழவாலை, சூறை, கேரை ஆகிய ரக மீன்கள் கிலோ ரூ. 250 வரையும் விற்பனையானது.

மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டபோதும், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டதால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.