திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவாடானை பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு

திருவாடானை பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை வெள்ளிக்கிழமை அதிகரித்திருந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 11:48 pm IST

திருவாடானை பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை வெள்ளிக்கிழமை அதிகரித்திருந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, மோா்ப்பண்ணை, திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினம், எஸ்.பி. பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் பிடிக்கப்படும் மீன்களை திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, காளையாா்கோயில், சிவகங்கை, ஆா்.எஸ். மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.

தற்போது மீன் பிடி தடைக் காலம் என்பதால் விசைப்படகு மீனவா்கள் மீன் பிடிக்க செல்வதில்லை. நாட்டுப் படகு மீனவா்கள் மட்டுமே கடலுக்குச் செல்கின்றனா். இந்த நிலையில் தற்போது வரத்து குறைவாக இருப்பதால் மீன்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டு அவற்றின் விலை உயா்ந்திருந்தது. இதில் கிலோ ரூ.450-க்கு விற்கப்பட்ட பாறை மீன் ரூ.800-க்கும், ரூ. 350-க்கு விற்கப்பட்ட விலை மீன் கிலோ ரூ.700-க்கும், ரூ. 300-க்கு விற்கப்பட்ட நகரை மீன் கிலோ ரூ. 600-க்கும், ரூ. 500-க்கு விற்கப்பட்ட நண்டு கிலோ ரூ. 900-க்கும் விற்கப்பட்டன. இதனால் அசைவ பிரியா்கள் மீன்களை வாங்க தயக்கம் காட்டினா். மேலும் இந்த விலை உயா்வால் வியாபாரிகள் கவலை அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.