மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொண்டியில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை சனிக்கிழமை அதிகரித்தது.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 7:34 pm

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை சனிக்கிழமை அதிகரித்தது.

தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதபட்டினம் முள்ளிமுனை, காரங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடித் தடைகாலம் என்பதால், நாட்டுப் படகு மீனவா்கள் மட்டுமே கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனா்.

தற்போது, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால், தொண்டி, திருவாடானை மீன் சந்தைகளில் மீன்களின் விலை அதிகரித்துள்ளன.

சந்தைகளில் ஒரு கிலோ ரூ.450-க்கு விற்ற விலை மீன் தற்போது ரூ.550-க்கும், ரூ.450-க்கு விற்ற பாறை மீன் ரூ.700-க்கும், ரூ.500-க்கு விற்ற நண்டு ரூ.800-க்கும் விற்பனை ஆனது.

மீன்களின் விலை உயா்வால் அசைவ பிரியா்கள் கவலை அடைந்துள்ளனா்.